Monday 22 May 2017

என் லட்டு குட்டி

வாய்ப்பிளக்க ராஜராஜனின்
பிரம்மாண்டம் ரசித்து
உள்ளும் வெளியுமான
ஆச்சரியங்களில் லயித்து
சோழர் பாண்டியர்
நாயக்கர் மராட்டியர்
என கோயிலின்
பரிணாமங்களை ஆராய்ந்து..

கலைந்து கிடைத்த
அத்துணை ஓவியங்களிலும்
மாயக் காதலன்_
வந்தியத் தேவனையும்
சுந்தரன் அழகன்_
அருள்மொழிவர்மனையும்
கயல்விழியாள் _
எம் பொறாமைக்கு உரியவளான
குந்தவை நாச்சியாரையும்..
கண்கள்இடுக
தேடிய பொழுதில்..

கோர்த்த விரல்களுக்குள்
எளிதாய் விரல் சொருகி
கவனம் ஈர்க்கும் சாகசங்கள்
அத்துணையும் புரிந்து..
முடியாது போன ஓர் நிலையில்
அபிநயம் பிடித்து..
கண்சிமிட்டி தானாக
விளையாடிய
தங்கை மகள்..
அத்துணையையும்
பின்னுக்குத்தள்ளி
பிரம்மாண்டமானாள்
எங்கள் முன்னே...!!!!!!

குட்டி கதை

நான் கௌதம்..சென்னைல வேலை..கம்ப்யூட்டர் இன்ஜினியர்...இதோ லீவ் ல சொந்த ஊரு கோயமுத்தூருக்கு வந்திருக்கேன்...ஒரு முக்கியமான வேலையை இம்முறை முடித்தே சென்னை திரும்ப வேண்டும்னு முடிவெடுத்திருக்கேன்

     என் நிறைவேறாத காதலின் ஓர் அடையாளம் நெஞ்சில் டாட்டூவாய் உறுத்திக் கொண்டே இருந்தது..அதை ஸ்கின் ஸ்பெசலிஸ்ட்டிடம்  காட்டி அழித்துவிட முடிவெடுத்தேன்..

    ஊரின் பிரபல மருத்துவமனையின் டாக்டரிடம் டோக்கன் போட்டுவிட்டு காத்திருந்தேன் ...அப்பதான் அவங்களைப் பார்த்தேன்...

அம்மாவும் பொண்ணும்... நடுத்தர குடும்பமாய் இருக்க வேண்டும்...இருவருமே ஹோம்லி அழகு..பெண்ணிற்கு 17_18 வயதிருக்கலாம்..அம்மா பின் முப்பதுகளில் இருந்தார்..காத்திருந்த அனைவருமே  மொபைல் நோண்டிக் கொண்டிருக்க.. இருவர் மட்டும் சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டே இருந்தனர்...

        எனக்கு ரொம்ப ஆச்சர்யம் ..அப்படி அம்மாவும் பொண்ணும் என்னதான் பேசுவாங்கன்னு...காத்திருந்து பொறுமை அற்ற நிலையில் மகள் எழுந்து ரிசப்சனிடம் விசாரிக்க...அடுத்ததாய் அவர் தான் என அவள் என்னை சுட்டி காட்டினாள்..
   
        அவள் ஸ்நேகமாய் சிரித்துவிட்டு அவள் முறை எத்தனாவதென விசாரித்துக் கொண்டிருந்தாள்..அழகிய முகம்.. ப்யூட்டிபார்லர் காணாத புருவங்கள்.. எலுமிச்சை நிறம்..... இயல்பிலேயே சிவந்த உதடுகள்...யாருடனும் ஸ்நேகமாகும் பாவம்..நீளமான கூந்தல்..நேர்த்தியான சுடிதார்..மொத்தத்தில் அம்சமாய் இருந்தாள்..

                எனைமறந்து நான் அவளை ரசித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு பெண் குழந்தையை இடுப்பில் வைத்தவாறு அவளை கடக்க அந்த குட்டி இவள் ஷாலை பிடிவாதமாய் பற்றிக் கொண்டு இழுக்க..முகம் கொள்ளா சிரிப்புடன் குழந்தையை வாங்கி கொஞ்சி பின் அதன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு நானிருக்கும் திசை பார்த்து சிரித்தாள்..

     ஒருகனம் இதயம் நின்று துடித்தது..அனிச்சையாய் என் தலை பின் திரும்ப என்னருகே அவள் அம்மா..அவ அவங்கம்மாவ பாத்து சிரிச்ருக்கா...இது புரியாத நான் வழிந்து வைக்க...அவள் இதழோர இளநகையுடன் ஒரு ஓரப் பார்வை பார்த்து அவள் அம்மா அருகே வந்து உட்காரவும் என் டோக்கன் நம்பர் அழைக்கவும் சரியாக இருந்தது...

           அவள் எனக்கு ஏதோ உணர்தினாள்.. என் பழைய காதலை டாட்டூவிலிருந்து மட்டுமல்ல என் மனதிலிருந்தும்  அழிக்க  என்னால் முடியும்னு அவளை நான் ரசிச்ச கனத்தில் உணர்ந்தேன்..

             டாக்டர பாத்திட்டு வெளில வந்தப்போ அவ அங்க இல்லை..பாத்தே ஆகனும்னு தோனல...ஆனா ஏதோ நிறைவா இருந்திச்சு .....

நீ மட்டும் போதும்

எனைத் தாண்டி எதையோ பார்க்கிறான் .. எனை என்றெண்ணி தலையசைக்க வாங்கிய மொக்கையும் கவிதையாகிறது..

     காலை நடைபயிற்சி பொழுதுகளில் கைபிடிக்கவேனும் பள்ளம் சறுகி காயம் வாங்குகிறேன்..

     சுற்றிவைக்கவென வாங்கிய சூடம் உன் வாய்ப் பார்த்தே கரைந்து போகிறது..என் கவலைகள் போல..

        நீ அறியாது உன்னை ரசிப்பது எனக்கான நீ தரும் வரம்... வரம் தந்த என்சாமி... உன் காலடி சொர்க்கமன்றி வேறெதுவும் அருளிவிடாதே...

       பிழைத்துபோகிறேன் உன் மூச்சின் மிச்சக் காற்றில் ... பூரணமாக்கிவிடு ... உன் அடர் புன்னகையால்... பிறவியில் நீ போதும்... நீ மட்டும் போதும்...❤❤