மொட்டை மாடியில் இரவின் வானம் மனம் மயக்கும் அனுபவம்... ஆழ மூச்சிழுத்து வாசனை உணர முயற்சித்தேன்.. எதுவும் நினைவில் இல்லை.. பரபரவென கைகளை தேய்த்து முகத்தில் படர்ந்த முடிகளை ஒதுக்கிவிட்டு மீண்டும் முயற்சி செஞ்சு பார்த்தேன்... மூளை காலியாக தோன்றியது.. தூரமாய் தெரியும் நட்சத்திர வெளிச்சம்... கொஞ்சம் கொஞ்சமாக பெருசா தெரிஞ்சுது... கண்கள் கூச மனம் வாய் விட்டு சிரிக்க ஆரம்புச்சுது...
எதுவுமில்லாத மனம் யாருக்கும் வாய்ப்பதில்லை வாய்க்க பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள்...
எந்த சிந்தனையும் இல்லாது என்னால் இப்போதெல்லாம் அதிக நேரம் தனிமையை கையாள முடிகிறது...
ஆனால் அந்த தனிமை கிடைக்காத போது ஆயாசம் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை...
தனிமையிலே இனிமை காண முடியும் 😊