என் பிரிய பட்டாம்பூச்சியே!!
இளவேனிற்கால தென்றலொன்றின் மூலமாய் உன் ஜன்னலடைந்த என் காதல் தூதில் என்னவெல்லாம் இருந்ததென பிரித்துணர்ந்தாயா?
மீசை மழித்த வேளைகளிலெல்லாம் முத்தமிட வசதியாயிருப்பதாய் வழிமொழிந்து வழிந்து வைத்த இவளை காது மடல் கவ்வி காதுக்குள் செல்ல பெயர் உரைத்து மயங்க வைத்ததை நினைவுக் குறிப்பில் வைத்திருக்கிறாய் தானே?
இழுத்துப் பிடித்து துவைத்த போர்வையை நாமிருவருமாய் பிழிந்து கொண்டிருந்த அதிகாலை பொழுதொன்றில் நம் இதழீரமும் சுவைத்ததை கால ஃப்ரீசரில் வைத்திருப்பதை நீ அறிவாய் தானே?
உன் நினைவை ஈன்றும் என் கர்ப்ப நொடிகளுக்கு மட்டும் பிள்ளைப்பேறு நிறைவுறுவதே இல்லை...
மறவாது... நின்
போதை தெளியாது
பேதை இவள்
எதிர்நோக்கும் யாவிலும்
உன் பிம்பம்...
என் யாதுமானவனே என் வானெங்கும் நீயே நிறைந்து சிறகுவிரி.. உனை என்னிடம் அள்ளிச் சேர்த்திடும் அந்த ஓர் இரவுக்கான நிலவிடம் முன்பதிவு செய்துவிடு...
காத்திருக்கிறாள் இவள்....
காதலோடு❤❤