என்னருகே அவன்
ஓரிரு நிமிடங்களில்
என்னவனாகப் போகும்
அவன்...!!!
மாலையிட்ட கழுத்து
முகம் நிறை புன்னகை
கண்கள் நிறை காதல்
கண்ணோர கள்ளப்பார்வை
வயிற்றில் பட்டாம்பூச்சி
குறுகுறுக்க
காத்திருந்த நிமிடங்கள்
உறைந்து நிற்பதாய்
அதீத பிரமை...
தோள் உரசும்
தருணமெல்லாம் உயிர்
பற்றி எரிய
இவனே அவன்...
"என்னவன்" என
உள்ளம் பிதற்றியது...
முகப்பூச்சுக்கும் மேல்
சிவக்கும் கன்னம்..
தோழியரின் எள்ளலில்
கன்றிபோனது எனலாம்...
நிச்சயித்தநாள் முதல்
காதல் பழக
எத்தனித்த மனம்
இன்று
அவன் வாசத்தில்
சுவாசிக்கிறது...!!
யாரோவாய் இருந்தவன்
இன்று
யாதுமாகி நிற்கிறான்..!!!
காதல் என்னை
தொட்டதாய் உணரவில்லை...
அவனுடனான அன்றைய
பொழுதில் உணர்ந்த
பாதுகாப்பிற்கு நான்
காதல் எனப் பெயரிட்டதில்
பாதகம் வந்துவிடப்
போவதில்லை...!!!
தோள் பிடித்து.. கண் பார்த்து..
கைப்பிடித்து...விதவிதமான
ஒப்பனைகளில்
நிழற்படம் சிறு பேழையில்
சேகரமாக ...இதோ
அவன் என்னுள்
முழுமையாய்
நிறைந்து விட்டான்....