என் பிரிய பட்டாம்பூச்சியே..
உன் கைச் சிறைக்குள் அகபடாததாய் எக்களித்துக் கொள்ளும் வேளையிலெல்லாம் தளர்ந்தது போல ஒரு பாவனை செய்வாயே... அப்போதெல்லாம் ஓடி அணைத்து உன் மூச்சை முத்தமாக உறிஞ்சிட உதடுகள் தவித்துதான் போகும்..
அழிச்சாட்டியம் பன்னாது உன் அணைப்பில் நுழைவதில் சுவாரஸ்யமிருப்பதில்லை.. அதன்பின்னரான உன் அணைப்பில் சாத்வீகமும் தெரிவதில்லை..
சிந்திய மழைத்துளி யாவும் முத்தாவதில்லையே ... முத்தாகிடாதததால் அவை மதிப்பில்லை என ஆவதுமில்லை..
அள்ளி குடிக்கும் பாவனையில் உன் முகமேந்தி முத்தங்கள் விதைக்கிறேன்.. ஆனால் நானே அறுவடை ஆகும் அதிசயத்தை நீ நிகழ்த்தி விடுகிறாய்...
இதோ தயாராகி விட்டேன் உன்னோடு ஓர் கண்ணாமூச்சி ஆடிட... விரைந்து வா..சிறகு விரித்து...❤