Monday 22 June 2020

தனிமையிலே இனிமை ❤️

மொட்டை  மாடியில் இரவின் வானம் மனம் மயக்கும் அனுபவம்... ஆழ மூச்சிழுத்து வாசனை உணர முயற்சித்தேன்..  எதுவும் நினைவில் இல்லை.. பரபரவென கைகளை தேய்த்து முகத்தில் படர்ந்த முடிகளை ஒதுக்கிவிட்டு மீண்டும் முயற்சி செஞ்சு பார்த்தேன்... மூளை காலியாக தோன்றியது..  தூரமாய் தெரியும் நட்சத்திர  வெளிச்சம்... கொஞ்சம் கொஞ்சமாக பெருசா தெரிஞ்சுது... கண்கள்  கூச  மனம் வாய் விட்டு சிரிக்க ஆரம்புச்சுது...

எதுவுமில்லாத மனம் யாருக்கும் வாய்ப்பதில்லை  வாய்க்க பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள்...

எந்த சிந்தனையும் இல்லாது என்னால் இப்போதெல்லாம் அதிக நேரம் தனிமையை கையாள முடிகிறது...

ஆனால் அந்த தனிமை கிடைக்காத போது ஆயாசம் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை...

தனிமையிலே இனிமை காண முடியும் 😊

சிறகு விரிக்கும் கற்பனை ❤️

ஆளில்லாத வீட்டில் பொருட்கள் பேசுமா..

ஒளிந்திருந்து அறிந்திடும் பேராவல் குறுகுறுக்க அதையே செய்தும் பார்த்தேன்.. எங்களின் காதலுக்கும் மோதலுக்கும் சாட்சியாய் இருந்தவைக்கு காதலிக்க தெரியுமா...  சண்டையிட்டு கொள்ளுமா...  

   பேராவல் பொங்க திரை மறைவில் காத்திருந்தேன்...  

     ஆக்கி வைத்த பானைகளும்  கிண்ணங்களும் சூடு பொறுக்க முடியலைன்னு முதலில் வாய் தொறக்க.. சுழன்று சுழன்று துவைத்த நான் பாவமில்லையா என washing machine னும் தன் பங்கிற்கு கதறியது.. 

       இடை விடாது கத்தித் தவிக்கும் தன்னை யாரும் பாக்கலியானு உடனே home theatre உறுமியது.. வெங்காயத்தை நறுக்கி விட்டு கழுவாமல் வைத்து விட்டு நான் வந்ததை குற்றமாய்ச் சொல்லி அரிவாள்மனை
கண்ணீர் வடித்தது...

        நான்கு காலில் நின்ற நாற்காலியோ
ஒரு படி மேலேறி... முறுக்கி விட்டுக்  கொண்டது.. எல்லாம் கேட்டுக் கொண்டே மிக்ஸியும் கிரைண்டரும்.. புன்சிரிப்பாய் சிரித்துக் கொண்டன... 

       இத்தனைக்கும் நடுவில் அந்த கட்டிலும் மெத்தையும் losliyavum  kavin ணுமாய் காதல் செய்து கொண்டிருந்தது தான் hilight 😍

திடீரென அடித்த காற்றில் திரை அகல என்னைப் பார்த்து யாவும்  மீண்டும் தன் நிலைகே திரும்பியதாய் நான் நம்ப வைக்கப்பட்டேன்... ❤️

Monday 6 January 2020

மனம்

தலைவாசலில்
தலைசாய்க்க எண்ணி
தொப்பென தலையனை
தூக்கி போட்டேன்...
ஊர்ந்த எறும்புக்கூட்டம் 
சிறிது அதிர்ந்து சிதறி
மூக்கும் மூக்கும் முட்ட
சில நொடிகள் அங்கலாய்ப்புக்குபின்...
மீண்டும் அதே வரிசையாய்...

அதன் வரிசை மாற்றும்
துர்நோக்குடன் சிதறிகிடந்த
பூந்தியின் துளிபாகம் வைத்து
அதன் வழி மறைத்தேன்...
முட்டி நின்ற முதல்எறும்பு
திகைத்து தடுமாற
பின்வந்த எறும்புகளுக்குள்
கலவரம் ஆனது....
முட்டி முட்டி
முத்தமிட்டதோ....
தலையிடித்து வன்மம்
தீர்த்ததோ...இலலை
தலைமையின் உத்திரவு
கேட்டதோ தெரியவில்லை...
பூந்தியை சுற்றி
வேறு வழி சமைத்து
மீண்டும் பயனித்தது.......

இனி ....தலைவாசலில்
படுப்பதில்லை என்றமுடிவு
தற்காலிகமாக
எடுக்கப்பட்து!!!