Monday 6 January 2020

மனம்

தலைவாசலில்
தலைசாய்க்க எண்ணி
தொப்பென தலையனை
தூக்கி போட்டேன்...
ஊர்ந்த எறும்புக்கூட்டம் 
சிறிது அதிர்ந்து சிதறி
மூக்கும் மூக்கும் முட்ட
சில நொடிகள் அங்கலாய்ப்புக்குபின்...
மீண்டும் அதே வரிசையாய்...

அதன் வரிசை மாற்றும்
துர்நோக்குடன் சிதறிகிடந்த
பூந்தியின் துளிபாகம் வைத்து
அதன் வழி மறைத்தேன்...
முட்டி நின்ற முதல்எறும்பு
திகைத்து தடுமாற
பின்வந்த எறும்புகளுக்குள்
கலவரம் ஆனது....
முட்டி முட்டி
முத்தமிட்டதோ....
தலையிடித்து வன்மம்
தீர்த்ததோ...இலலை
தலைமையின் உத்திரவு
கேட்டதோ தெரியவில்லை...
பூந்தியை சுற்றி
வேறு வழி சமைத்து
மீண்டும் பயனித்தது.......

இனி ....தலைவாசலில்
படுப்பதில்லை என்றமுடிவு
தற்காலிகமாக
எடுக்கப்பட்து!!!