கழுத்தும் பேசுமா...
ஆச்சரியந் தெளிந்தேன்
இதழோடு உரையாடியதை
கண்டதிலிருந்து...😍❤
Thursday 23 August 2018
வீடு🏡
வீடு..
வெளிய போயிட்டு ரொம்ப நேரம் கழிச்சு வீட்டுக்குள்ள நுழைந்தவுடன் வரும் உணர்வுக்குத தான் நான் நிம்மதினு பெயரிடுவேன் .
கதவை திறக்கவும் காலையில் சமைத்த வாசனையின் மிச்சம் முகத்திலறைய பெரும் பசி உயிர்க்கொள்ளும். தொடரும் பணிகள் மண்டையில் ஓடினாலும் மனம் ஆசுவாசித்துக் கொள்ளும்.
சமையலறையில் ஊறும் எறும்பும் கூட வந்திட்டியானு கேக்றாப்ல இருக்கும். இதுவே ஊருக்குலாம் போயிட்டு நாள் சென்ற பின்னர் வந்தால் திரைச்சீலைகள் கூட கையசைத்து அழைப்பதாகத் தோன்றும்.
ஓடிப்போய் விரிந்துகிடக்கும் சோஃபாவிற்குள் அடைக்கலமாகிக் கொள்வேன். கதகதப்பான அனைப்பில் அவை ஓராயிரம் கதைகள் சொல்லும் .
பால்கனி கைப்பிடிகளுக்குக் கூட என்னிடம் சொல்லவென அணிற் கதைகளும் எச்சமிட்டுக் சென்ற காக்கையின் மீதான புகாரும் இருக்கும்.
நான்கு முறையேனும் வலம் வந்த பிறகுதான் வீட்டினுள் அனைத்தும் சமாதானமானதாகத் தோன்றும் .
வீட்டிற்கான வரைமுறை என்றெல்லாம் என்னிடம் எதுவுமில்லை. ஆனால் என் நிம்மதியின் ஆதாரம் என் வீடன்றி வேறேதுமில்லை