சேனல் மாத்தி மாத்தி வீட்டம்மா சீரியல் பார்க்க பாதி படித்த விகடனை மூடி வச்சிட்டு என் ரெகுலர் வேலை பாக்க கூடையை தூக்கினேன் . சரவணன் மீனாட்சி ஆரம்பிக்க என்னென்ன காய் வாங்கனும்னு வீட்டம்மாட்ட பட்டியல வாங்கி வெளில வந்தேன். நான் ஜெயபாண்டியன் சுருக்கமா ஜெ.பி .கவர்மன்ட் வேலை .வயசு48. ஒரே பையன் .பி .ஈ. இரண்டாவது வருசம் படிக்கிறான். எந்த சுவாரஸ்யமில்லாத செக்குமாட்டு வேலை .ஆனால் நிரந்திர வருமானம் . நிம்மதியான வாழ்க்கை.
யோசித்தபடி செல்வம் காய்கறி கடைக்கு வந்தேன். வழக்கமான நைட்டி மேல துண்டு போட்ட நாலு பெண்கள். சிறிய கூட்டம் . அசுவாரஸ்யமாய் பார்வையை நகற்ற அவளை பார்த்தேன். வீட்டுக்காரருடன் வந்து வண்டியில் இறங்கினாள். நாற்பதிருக்கலாம் வயது. யாரையும் கவர்ந்துவிடும் களையான முகம்..
சிரித்து பேசியபடியே காய் வாங்கினாள் . செல்வத்திற்கு நெடு நாள் பழக்கம் போல. வெண்டைக்காய் உருளைகிழங்கு வெங்காயம் தக்காளி னு அவள் கூடையை நிறைக்க நான் கண் நிறைக்க அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்..
அவளுக்கு உள்ளுணர்வு உணர்த்தியதோ என்னவோ டக்குனு திரும்பினாள். ஒரு நிமிட விழிதீண்டல்... 18 ஆக உணர்ந்தேன் ... காசு கொடுத்து அவள் நகர்ந்து அந்த டிவி எஸ் எக்ஸலில் வீட்டுக்காரரின் இடுப்பை சுற்றி கை போட்டு சட்டையை இறுக பற்றி அமர்ந்தாள். அவரும் ஸ்டார்ட் செய்தவாறு ஏதோ சொல்ல .. நாற்பதிலும் பெண்ணிடம் பூக்கும் வெட்கத்தை அன்று அறிந்தேன்.
எப்படி காய் வாங்கினேன்.. எப்படி வீடு வந்து சேர்ந்தேன் எதுவும் நினைவிலில்லை. ஒரு ஐந்து நிமிட கவணிப்பில் ஒரு பெண்ணால் இவ்வளவு தூரம் கவரப்பட்டோமே அதுவும் இந்த வயதில் என வெட்கமாக உணர்ந்தேன்..
மறுநாளும் அதே நேரம்.. அதே கடை.. அதே பெண்... இன்றைக்கு வண்டியை அவளே ஓட்டி வந்தாள். கள்ளத்தனமாய் நான் அவளைப் பார்க்க காய் வாங்கி முடித்த அவளுக்கு ஏதோ போன் கால் வந்து விட்டது.. தள்ளி நின்று பேசினாள் ஏதோ கணக்கு ..ஐடி .. என்று . பேசி முடித்து போனை பர்சில் போட்டுவிட்டு ஏதோ தீர்மாணித்தவளாய் ஆழ மூச்சிழுத்து என்னை நேருக்கு நேராய் பார்த்து புன்னகைத்தாள்..
மனதிலிருந்த சாத்தான் தூரமாய் போய் விழுந்தான். இப்பெல்லாம் அடிக்கடி அவளைப் பார்க்கிறேன். புன்னகையாலும் சிற்சில ஹலோக்கலாலும் அந்த மனிதி என் சிநேகிதி ஆகிவிட்டிருந்தாள்.