நித்தம் கொஞ்சி கொள்வதில்லை
அதற்க்காக நினைவில் நிலைப்பதில்லை...
என்று பொருள் இல்லை..
செல் பேசி வெட்கம் கொள்ளும்
அளவிற்கு பேசிக் கொண்டதும் இல்லை..
பேசும் அந்த ஓர் நாள்
நினைவில் எதையும் நிறுத்தியதாக
நியாபகம் இல்லை...
விசாரிப்புகளில் தொடங்கிடும் உரையாடல்
குரல் தெளிவில் சொக்கி கிடந்திடும் வேளைகளில்..
பேர் சொல்லிடும் அழைப்புகள்
போதையின் இன்னும் ஒரு பரிணாமம்..
நிகழ்வுகளை கவிதை ஆக்கிட
"அதன்" துணை அவசியமோ..?
"இதன் துணை" என
சொல்லித் தெரிய வேண்டியதில்லை..
அப்படித் தானே?
எதையும் தர்க்க ரீதியில்
உணர வைத்திடும் வாய்ப் பேச்சுக்கு
அலைபேசி முத்தம் என்னவோ
சற்றுக் குறைவு தான்..
என் இப்போதைய கேள்வி எல்லாம்
பேசிச் சென்ற பிறகு
நீ துடைத்து கொண்டது
நெற்றியையா கன்னத்தையா
இல்லை
உதட்டையா என்பது மட்டுமே..
பதில் வேண்டிடாத கேள்வி ❤️