Saturday 27 January 2018

💔

ஒடித்த கரும்பின் சாறு வடிந்து உலர்ந்திட்ட பின்னரான பிசுபிசுப்பாக.. என் இரு கன்னக்கதுப்புடளிலும் உன் முத்தம் மிச்சமிருக்கிறது...

 இடறி இடித்து பெயர்ந்த பெருவிரல் நகக்கண்ணில் நீ போட்டுவிட்ட நகப்பூச்சும் விடாது பற்றிக் கொண்டிருக்கிறது...

 பேரன்பின் பெருக்கில் உனை அணைத்து வெறி கொண்டு கடித்த உன் சருமத் துணுக்குகளும் பல்லிடுக்கிலிருந்து வெளிவர விரும்பவில்லை ...

கசப்பும் துவர்ப்பும் புளிப்புமான மிச்ச நினைவுகளை நிறைத்திருக்கிறாய்... சுவை மாறாது வைத்திருக்கிறேன் திருப்பி அளித்திட..

முத்தங்களின் போதெல்லாம் ப்ரத்யேக வாசனையோடு நாசிகளை நிரைத்திட்ட உன் சுவாச ஓட்டங்களை... என் நுரையீரலில் நரப்பி வைத்திருக்கிறேன்...

 முறிவிற்குப் பின்னரும் நீயே என் நானாக இருக்கிறாய்.. வாயேன் ஒரு தேநீரில் மீண்டும் இணைந்துப் பார்க்கலாம்...❤

Thursday 25 January 2018

தேவைக்கு சுழன்றிய பின்னரான
பாதம் ஓய்ந்த நிலையில்
நான் தஞ்சமடைய நீ வேண்டும்...

இருகால் நீட்டிய உன்
சுவர் சாய்ந்த இருப்புகளின்
போதெல்லாம் உன்
காலிடையே குட்டித்
தூக்கமேனும் வேண்டும்...

ஓய்ந்த வாக்குவாதங்களின்
சுவடின்றி உன் நெஞ்சப்
பஞ்சனை ஏந்தல் வேண்டும்...

படபடத்த நிலைகளிலெல்லாம்
ஆசுவாசிக்க உன்
இருகை கதகதப்பு வேண்டும்...

அம்முவென்றும் தங்கமென்றும்
கொஞ்சி கெஞ்சிடவேனும்
வாரமிரு உன் ஊடல் வேண்டும்...

உன் மூக்கிற்கு கீழான
அந்த
முறுக்கிய மயிர்கற்றையின்
மீதான காதலுக்காகவேனும்
நீ எப்போதும் வேண்டும்...❤❤

பிà®°ிவு😔

எங்கோ ஒலித்திடும்
ஒலிப்பெருக்கியில் உன்
பிடித்தபாடல் கேட்கிறது..

கடந்திடும் முகங்களில்
உன் சாயல் ஒட்டிக் கிடக்கிறது..

ஏதேச்சையான சிலரது
சந்திப்புகளில்
உன் நினைவுகளின்
மிச்சம் புன்னகைக்கிறது...

சில உரையாடல்களில்
உன் பிரத்யேக
சொற்கள் தாவிக்குதிக்கிறது...

இமைக்கின்ற
கால இடைவெளிகளில் கூட
உன் பிம்பம்
மறைந்து தொலைவதில்லை...

சாத்தியமில்லாத
இந்த பிரிதலை
நிகழ்த்திவிட
கூடுதலான
உன் நினைவுப்பலமே
தேவையாகவும் இருக்கிறது....

தேநீà®°்

இருவிரல் பிடியில்
பெருவிரல் அணைப்பில்
இளஞ்சூடு உணர்ந்திட்ட
உள்ளங்கைகள்

நின்றாடும் ஆவியின்
மென் பரவலில்
நாசியடையும்
ஏல தேயிலையின்
நறுமணம்

தேநீர் பிரியம்😍

காதல் பஞ்சாà®°à®®்💘

 "இப்ப வரியா இல்லையா".. கேள்வியோடு நின்ற என்னை மொபைலில் இருந்து தலை தூக்காது விழிகளை மட்டும் உயர்த்தி அசுவாரஸ்யமாய் பார்த்தவனை வெறித்துப் பார்க்க எங்கோ.."விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன்.." னு பாடல் கேட்க ஏனோ சூழலுக்கு பொருத்தமாய் தோன்ற வெறித்த விழி சிரித்துத் தொலைந்தது..

               அசுவாரஸ்யமும் சுவாரஸ்யமாகிப் போக.. அவன் கைப்பற்றி அக்குள் குள் இறுக்கி பிடித்தபடியே வீடு பூட்டி ... இழுத்துச் சென்று பைக் அருகே நிறுத்தினேன்.. சாவியை தூக்கி போட்டு வானம் பாத்து சீட்டி அடித்த அவன்  உதடுகள் கோபம் உறிஞ்சி தொலைக்க ..நானே வண்டியை ஸ்டார்ட் செய்தேன் .. பின்னாடி உட்கார்ந்து உஷ்ண மூச்சால் கழுத்தில் கோலமிட்டு வேடிக்கை பார்த்தவாறு மட்டுமே வந்தான்..

இதோ கண்ணுக்கு மை போட்டுக் கொண்டே அவனை கண்ணாடி வழி ரசித்திருக்கும் இந்த வேளையில் கூட ஓரப் பார்வை வீசியதை நானறிந்திட கூடாதென.. மெல்ல முணுமுணுக்கிறான்  "விழியில் உன் வந்து விழுந்தேன் அந்த நொடியில்..."

                     பின்னொரு முறைக்கான கவிதைத் தருணங்கள் தரும் என்
 மன பஞ்சாரம் அவன்!

காதல் கிà®±ுக்கி

பின்னிருந்து கட்டித் தழுவிடும் போதெல்லாம்  என்னை உப்பு மூட்டைத் தூக்கிடும்  போதுமான வலு கொண்டிருக்கிறாய்..

         தாவிக் கடித்திட விழையும் போதெல்லாம் எளிதில் அகப்பட்டுக்  கொள்ளும் வித்தைக் கற்றிருக்கிறாய்.. 

           எட்டிக் கொடுத்திடும் முத்தம் ஒவ்வொன்றையும் சாதம் விரும்பிடும் குழந்தையாய் வாகாய் வாங்கிடும் காதல் பயின்றிருக்கிறாய்..

        இடைத் தெரிந்திடும் சேலைக் கட்டின் போதெல்லாம் குறிப்பறிந்து பணி செய்கிறாய் ...

        மூச்சின் ஏற்ற இறங்களிலெல்லாம் தாலாட்டிடும் மெத்தைத் தருகிறாய்.. இதைவிட வேறென்ன வேண்டிடப் போகிறதாம் இவள் காதல் போதை தெளியாதிருந்திட❤❤❤