ஒடித்த கரும்பின் சாறு வடிந்து உலர்ந்திட்ட பின்னரான பிசுபிசுப்பாக.. என் இரு கன்னக்கதுப்புடளிலும் உன் முத்தம் மிச்சமிருக்கிறது...
இடறி இடித்து பெயர்ந்த பெருவிரல் நகக்கண்ணில் நீ போட்டுவிட்ட நகப்பூச்சும் விடாது பற்றிக் கொண்டிருக்கிறது...
பேரன்பின் பெருக்கில் உனை அணைத்து வெறி கொண்டு கடித்த உன் சருமத் துணுக்குகளும் பல்லிடுக்கிலிருந்து வெளிவர விரும்பவில்லை ...
கசப்பும் துவர்ப்பும் புளிப்புமான மிச்ச நினைவுகளை நிறைத்திருக்கிறாய்... சுவை மாறாது வைத்திருக்கிறேன் திருப்பி அளித்திட..
முத்தங்களின் போதெல்லாம் ப்ரத்யேக வாசனையோடு நாசிகளை நிரைத்திட்ட உன் சுவாச ஓட்டங்களை... என் நுரையீரலில் நரப்பி வைத்திருக்கிறேன்...
முறிவிற்குப் பின்னரும் நீயே என் நானாக இருக்கிறாய்.. வாயேன் ஒரு தேநீரில் மீண்டும் இணைந்துப் பார்க்கலாம்...❤