ஏனென்று கேட்க
ஆளில்லாத மதர்ப்பு...
பெண்மை ஒன்றின்
நிராகரிப்பிலும் ..
செழித்திருந்த தன்திமிரிலும்..
கழிந்த பொழுதுகள்
வரமாய் தோன்றியது..
காலச்சூழல் மாற
குடுமபஸ்தர்களெல்லாம் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாய்
தோன்றவே.. நிகழும் யாவும்
நகராததாய் தோன்றியது..
சுழியாய் நிற்கும் நிஜம்
இரவுகளை நகராது
தடுத்து நிறுத்துவதாய்
பயமுறுத்தியது...
தேடலின் முடிவில்
கிடைத்தாள் அவள்!!!
கண்டேன் என் சீதையை என
உள்ளம் கொண்டாடியது..
சவமாய் கழித்த நாட்கள்போய்
இன்று சிவமாய் நான்!!!
என்னில் சரிபாதி கலக்க
காத்திருக்கும் சக்தியாய் அவள்!!
ஏனென்று கேட்க அவளிருக்க
நானும் குடும்பஸ்தனானேன்
பிடித்ததுக்கும் பிடிக்காததற்கும்
அவளே அகராதி ஆனாள்!!
என் பெயர் நேரெழுதிய
அவள் பெயர்காண
செலவிட்ட ஆயுள்பாதியை
சேர்த்தே வாழ இதோ
புறப்பட்டுவிட்டேன்!!!!